search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்தியாவசிய பொருள்"

    கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகையாக பெறப்படுகிறது. #Gaja
    புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் மீண்டு வர ஒரு சில வாரம் ஆகலாம் என கூறப்படுகிறது. மழையை தரும் புயல் என்று நம்பியிருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் புயலாகவே கஜா இருந்துள்ளது.

    கிராமங்களின் அழகை முற்றிலும் அழித்துள்ள இந்த புயலால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன் பெரும்பாலும் வீடுகளில் உணவு சமைப்பது முதல் குளிப்பது வரை பொதுமக்களின் தண்ணீர் தேவைக்கு போர்வெல் கிணறே ஆதாரமாக இருந்தது. ஆனால் தற்போது மின்சாரம் இல்லாததால் மக்கள் முடங்கியுள்ளனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைவீதிகளில் உள்ள நிறுவனங்களை நாடியுள்ளனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை நகர் பகுதியில் திருக்கோகர்ணம், திலகர்திடல், காமராஜ் நகர் பகுதியில் ஜெனரேட்டர்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. ஒருமணி நேரத்திற்கு ரூ.1000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இதனை நாடியுள்ளனர்.
    பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #Gaja #GajaCyclone
    பட்டுக்கோட்டை:

    கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. ‘கஜா’ புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

    நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு முதலில் முக ஸ்டாலின் சென்றார். அப்போது அவர், சேதம் அடைந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்படி உபகரணங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அவர், நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்து இருந்த மீன் இறங்கு தளத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் புயல் காற்றால் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.

    பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் காந்திநகர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முக ஸ்டாலின், அங்கு உள்ள உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்க்கும்போது சில குறைகள் உள்ளதை பார்த்தேன். இந்த குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாரும் வந்து பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். புயல் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சேத விவரங்களை ஊடகங்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.

    கஜா புயலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியான சதீஷ் குமார், ரமேஷ்குமார், தினேஷ் குமார், அவரது உறவினர் அய்யாதுரை ஆகியோரது வீட்டுக்கு முக ஸ்டாலின் சென்றார். அங்கு 4 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே அணைக்காட்டில் தென்னை மரம் விழுந்ததில் பலியான ஜெயலெட்சுமி வீட்டுக்கு சென்று முக ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
    கஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone
    கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல் - மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து துறை ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடைக்காமல் 100-க்கும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

    தஞ்சையில் ஒரு சில இடங்களில் மின்சார கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கஜா புயலில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. எப்போதும் மக்கள் கைகளில் இருக்கும் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் நிலை நீடித்து வருகிறது.

    தஞ்சை நகரத்தில் பெரும்பாலானவர்களின் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை வாங்க கடைகளில் திரண்டனர்.

    செல்போன் வசதி இருந்தால் மட்டும் எந்த தகவல்களையும் மற்றவர்களுக்கு பரிமாற முடியும். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் கூட உதவிக்கு மற்றவர்களை அழைக்க முடியும் என்பதால் செல்போனில் சார்ஜ் வைத்திருப்பது இந்த தருணத்தில் அவசியமாக உள்ளது.

    இதையொட்டி தஞ்சை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்குகளை வாங்கி சென்றனர். பவர் பேங்குகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அவர்களது செல்போனில் சார்ஜ் ஏத்தி விட்டும், அவர்கள் வாங்கி செல்லும் பவர் பேங்கில் சார்ஜ் முழுமையாக ஏத்தி விட்டும் விற்பனை செய்தனர்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மக்கள் அவர்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லை என்பதால்தான் பவர் பேங்க் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களால் முடிந்த உதவியாக அவர்கள் செல்போனுக்கும், வாங்கி செல்லும் பவர் பேங்குக்கும் சார்ஜ் நிரப்பி கொடுக்கிறோம் என்றனர்.

    இதேபோன்று மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்கும் எமர்ஜென்சி லைட்டுகளும் தஞ்சையில் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    நிவாரம் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் முக ஸ்டாலின் பயணத்தை ரத்து செய்து திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டார். #GajaCyclone #GajaStorm
    தஞ்சாவூர்:

    கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. கிராம மக்கள் வீடுகளை இழந்தும், கால்நடைகளை இழந்ததும் தவித்து வருகின்றனர். மேலும் மீனவர்களின் படகுகளும் சேதமாகி உள்ளன.

    பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள், வாழைகள், தென்னைகள் முறிந்து விழுந்ததில் டெல்டா விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். தரங்கம்பாடி, நாகை அக்கரைபேட்டை, வேதாரண்யம், மற்றும் பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு தஞ்சை சங்கம் ஓட்டலில் முக ஸ்டாலின் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் முக ஸ்டாலின், தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு காரில் புறப்பட்டு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து அவர் பார்வையிட நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.

    புதுக்கோட்டை செல்லும் வழியில் கந்தவர்வக்கோட்டை பகுதியில் சாலையில் பொது மக்கள், கஜா புயல் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்ததால் முக ஸ்டாலின் பயணத்தை கைவிட்டு திரும்பினார். பிறகு அங்கிருந்து திருச்சி வழியாக கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பொதுமக்கள் போராட்டம் காரணமாக முக ஸ்டாலின் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை நீண்டு கொண்டே செல்கிறது. அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே பணிபுரிவதை காண முடிகிறது.

    திருச்சி, சிவகங்கை, மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் இருந்து தீயணைப்பு துறையினர் 300 பேர் வந்து, பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டுமானால் மீட்பு பணியாளர்கள் அதிகமாக தேவைப்படுகிற நிலை உள்ளது.

    சாய்ந்த மரங்கள் அகற்றப்படாததால் கிராமப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பஸ்கள், லாரிகள், கார்கள் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவரக்கூடிய நிலை உள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

    வீடுகள் முன்பு மற்றும் தெருக்களில் சாய்ந்த மரங்களை பொது மக்களே வெட்டி அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் வெட்டிய மரக்கிளைகளை எடுத்துச் செல்லக்கூட பணியாளர்கள் யாரும் இல்லை.

    மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டதால் மின்கம்பங்கள் சேதத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சேதமடைந்த மின்கம்பங்கள், கம்பிகள், டிரான்ஸ்பார்மர்களுக்கு பதிலாக உடனடியாக புதியவை பொருத்த முடியாததால் மின்சாரம் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார வினியோகம் இல்லாததால் குடிநீர் வினியோகமும் பாதிப்படைந்துள்ளது. குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசு கொடுத்து தண்ணீர் வாங்க நினைத்தாலும் உரிய தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.



    கிராமங்களில் தேங்கிய மழை நீரை பாத்திரங்கள் கழுவவும், துணிகள் துவைக்கவும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மீட்பு பணிகளில் முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆவுடையார்கோவில், திருமயம், மீமிசல், மணமேல்குடி, கொடிகுளம், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய 7 பகுதிகளுக்கு நேற்று மின்சார சேவை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இருப்பினும் இன்னும் புதுக்கோட்டை நகரப்பகுதி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு மின்சார சேவை முற்றிலும் இல்லாததால் கடந்த 2 நாட்களாக இரவில் மின்சாரம் இன்றி இருள் நிறைந்து காணப்படுகிறது.

    நெடுஞ்சாலை பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியும் மும்முரமாக நடக்கிறது. பொக்லைன் எந்திரம், ராட்சத எந்திரங் களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரக்கிளைகளை நகராட்சி பணியாளர்கள் லாரி மூலம் அப்புறப்படுத்தி வருகின்ற னர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல புயல் தாக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன்பின் தற்போது ‘கஜா‘ புயலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர். புயல் பாதிப்பு மீட்பு பணி நேற்று 2-வது நாளாக நடந்த நிலையில், முழுமையாக முடிவடைய இன்னும் 6 நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வார காலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூறைக்காற்றால் மாவட்டத்தில் மா, பலா, தென்னை மரங்கள் சாய்ந்ததோடு, காய்கறிகள், கரும்புகள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அரிமளம் பகுதியில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் பல ஏக்கர் கணக்கில் சேதமடைந்துள்ளன.

    விவசாயிகளின் விளைபொருட்கள் பாதிப்படைந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு சமைக்கும் பொருட்கள் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    டீசல் விலை அதிகரிப்பால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர். இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. #PetrolDieselPrice #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏற்றம் காணப்படுகிறது.

    இந்த நிலையில் டீசல் விலை உயர்வை காரணம் காட்டி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

    இதையடுத்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்றும், இந்த கட்டண உயர்வு 24-ந் தேதி (அதாவது நேற்று) அதிகாலை முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.



    அதன்படி கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினசரி டீசல் விலை உயர்வால் எங்களுடைய தொழில் நலிவடைந்து வருகிறது.

    எனவே வேறு வழியின்றி சரக்கு லாரிகளின் வாடகை கட்டணத்தை 22 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறோம். இடம், எடை, பொருட்கள் ஆகியவற்றை மையப்படுத்தி கட்டண உயர்வு இருக்கும்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ.8 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்ட சரக்கு வாடகை கட்டணம் ரூ.10 ஆயிரமா கவும், சேலத்தில் இருந்து திருச்சி, கோவைக்கு ரூ.6 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    வடமாநிலங்களுக்கு செல்லும் லாரி வாடகை கட்டணம் ரூ.25 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கான கட்டணத்தை ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சமாக உயர்த்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பார்சல் புக்கிங் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (வால்டாக்ஸ் சாலை) செயலாளர் ஜெ.ரமேஷ்குமார் கூறியதாவது:-

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் 400-க்கும் மேற்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு, வெளிமாநிலங்களுக்கும் சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெற்று வருகிறது.

    தற்போது டீசல் கட்டண உயர்வால் வேறு வழியின்றி லாரி சரக்கு வாடகை கட்டணத்தை உயர்த்தி உள்ளோம். இதுவரையில் ஒரு டன் மளிகை பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,200 கட்டணமாகவும், இரும்பு பொருட்களை எடுத்து செல்வதற்கு ரூ.1,250 கட்டணமாகவும் வசூலித்து வந்தோம்.

    இன்று முதல் (நேற்று) 25 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வரும்பட்சத்தில், உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை குறைக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர பஸ்களிலும் பயணிகள் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் அதிரடியாக விலை ஏற்றப்பட்டது. இந்த நிலையில் சரக்கு லாரி வாடகை கட்டணமும் அதிகரித்து இருக்கிறது.

    சரக்கு லாரிகள் கட்டண உயர்வால், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.  #PetrolDieselPrice #PetrolPriceHike
    ×